Sunday, 17 July 2011

காயகற்பங் கொண்ட சித்தர்கள்.

"கேளப்பா அகத்தீசர் கற்பம் நூறு
கிருபையுள்ள நந்தீசர் கற்பம் நூறு
நாளப்பா போகமுனி நாதர் கற்பம்
நாற்பத்து நாலுகற்பம் நன்றாய்க்கொண்டார்
வேளப்பா சட்டை முனிதின்ற கற்பம்
மேதினியில் லிருபத்தோர் கற்பமாகும்
ஆளப்பா கொங்கண ரீரெட்டாக
அருந்தினார் கற்பமிக அருந்தினாரே"

"அருந்தினார் திருமூலர் அறுபத்தாறு
அற்புதமாய் கற்பன்களன்பாய்க் கொண்டார்
பொருந்தியதோர் கோரக்கநாதர் தானும்
பூதலத்தில் தொண்ணூறு கற்பங்கொண்டார்
திருந்தியதோர் ரோமரிஷி கூகைக்கண்ணர்
செப்பமுள்ள மச்சமுனி இராமதேவர்
வருந்தியே எழுபத்தோர் கற்பங்கொண்டார்
மானிலத்தில் சாகவரம் பெற்றாரே"


சித்தர்கள் அவரவர் அனுபவித்தபடி கற்ப முறைகளைக் கூறியுள்ளார்கள் என்றும் அவரவர் கொண்ட கற்ப எண்ணிக்கைகளைத் தேரையர் பட்டியலிடுகிறார்.
அகத்தியர் 100, நந்தீசர் 100, போகர் 44, சட்டைமுனி 21, கொங்கனவர் 16 , திருமூலர் 66, கோரக்கர் 90, ரோமரிஷி 71, மச்சமுனி 71,ராமதேவர் 71. இப்படிக் கற்பம் சாப்பிட்டவர்கள் அநேகம் பேர் தெரியாமலும் இருக்கிறார்கள். வள்ளல் பெருமான் இவர்கள் காலத்துக்குப் பிந்தியவர், ஆனால் வள்ளலார் மருத்துவ காயகற்ப முறைகளை விட யோக காயகற்ப முறைகளையே பின்பற்றினார்.

No comments:

Post a Comment