Sunday, 17 July 2011

சூக்கும சரீரம்…

இது உள்ளுடம்பு. இதைக்கொண்டு யாவற்றையும் உணர்ந்து கொள்ளலாம். தொலைவில் நிகழ்வதைப் பார்க்கலாம், கேட்கலாம். அப்படிப் பார்ப்பதும் கேட்பதும் புறத்தே உள்ள கண்களாலோ கதுகளாலோ அல்ல, சூக்குமமான அந்தக்கரண அறிவால், அவை அனுபவம் ஆகும்.

சூக்கும சரீரம் ஒளி பொருந்தியது, இந்த ஒளி தூய எண்ணம், தூய சொல், தூய செயல், இவற்றால் வருவதேயாகும். அது அறிவினால் சிறப்புப் பெற்றவர்களிடம் பொன்னிற ஒளியாகவும், பண்பால் சிறப்பு பெற்றவர்களிடம் வெண்ணிற ஒளியாகவும் விளங்குமாம்.

மூலாதாரத்தின் முக்கனலில் உருவாகிறது சூக்கும உடம்பு.

சித்தர்கள் சூக்கும தேகத்தை தூல தேகத்திலிருந்து பிரித்துக் கொண்டு விரும்பிய இடத்திற்குச் சென்று வந்து மீண்டும் தூல தேகத்துடன் பொருத்திக் கொள்வராம்.

இந்த சூக்கும தேகமானது தூல தேகத்தை பிரிந்தால் தூல தேகம் இயக்கமற்று நின்று விடும். இப்படி சூக்கும தேகம் பிரிதலே மரணம் எனப்படும்.

இந்த தூல தேகத்திலிருந்து பிரிந்த சூக்கும தேகத்தை , சூக்குமதேகத்திலிருந்து பிரிந்த வேறொரு தூல தேகத்தில் போருத்துவதையே கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்.

No comments:

Post a Comment